முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது!

சென்னை (21 பிப் 2022): முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது செய்யப்படுள்ளார். தமிழகத்தில் கடந்த பிப் 19 ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதம் ஏந்திய காவல்துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்…

மேலும்...

பூணூல் அறுப்பு போராட்டம் கயமைத் தனமானது – ஜவாஹிருல்லா!

சென்னை (21 பிப் 2022): பூணூல் அறுப்பு போராட்டம் கயமைத் தனமானது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கும் கர்நாடக பாஜக அரசை எதிர்த்து இந்துக்கள், கிறிஸ்த்தவர்கள், எழுத்தாளர்கள்ள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உட்பட சமூக நல்லிணக்கத்தை நேசிக்கும் அனைத்து இந்தியர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் தமது…

மேலும்...

ஹிஜாபை அகற்றச்சொன்ன பாஜகவை சேர்ந்தவர் சிறையிலடைப்பு!

ஹிஜாபை அகற்றச்சொன்ன பாஜகவை சேர்ந்தவர் சிறையிலடைப்பு! மதுரை (20 பிப் 2022): மதுரை மேலூரில் முஸ்லீம் பெண்ணின் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜகவை சேர்ந்தவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8 ஆவது வார்டில் உள்ள அல்அமீன் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க. முகவர் கிரிநந்தன் கூறியதற்கு தேர்தல்…

மேலும்...

மதுரை அருகே முஸ்லீம் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட்!

மதுரை (19 பிப் 2022): மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் முஸ்லீம் பெண் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது…

மேலும்...

இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 2021-ம் ஆண்டு 8.70 லட்சம் பேர் மரணம்!

மதுரை (18 பிப் 2022): வரலாற்றில் இதுவரை இல்லாத அலவிற்கு தமிழகத்தில் 2021-ம் ஆண்டு 8.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழக மக்கள் தொகை 6 கோடியே 24 லட்சம் ஆகும். இது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 7 கோடியே 21 லட்சமாக உயர்ந்தது. 2021-ம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற வில்லை. இருந்தாலும், தமிழக மக்கள் தொகை தற்போது 8 கோடியை…

மேலும்...

என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் – ஸ்டாலின் மீது ஓபிஎஸ் பாய்ச்சல்!

சென்னை (17 பிப் 2022): “ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என் மீது முதல்வர் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காணொலிக் காட்சி வாயிலாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு குறித்து பேசி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட காரணமாக இருந்த கட்சி மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த தி.மு.க….

மேலும்...

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் – இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது!

சென்னை (17 பிப் 2022): நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. 218 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம்…

மேலும்...

தமிழகத்தில் ஹிஜாபுக்கு தடை – பாஜக அண்ணாமலை!

குன்னூர் (15 பிப் 2022): தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி கல்லூரிகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குன்னூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது: “தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்படும். பொதுவெளியில் வேண்டுமானால் ஹிஜாப் அணியலாம். ஆனால் பள்ளி கல்லூரிகளில்…

மேலும்...

பிளஸ்டூ வினாத்தாள் கசிவு – விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

சென்னை (15 பிப் 2022): பிளஸ் டூ திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தளர்வுகள் காரணமாக அன்றாடம் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முன்னதாக 12 ஆம் வகுப்பு உயிரியல்…

மேலும்...

திமுக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் 48 பேர் கட்சியிலிருந்து நீக்கம்!

சென்னை (15 பிப் 2022): நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் திமுகவை சேர்ந்த 48 பேரை தற்காலிகமாக நீக்கம் செய்து கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கழக வேட்பாளர்களை எதிர்த்தும், தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்டவர்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள். வேலூர் மாநகரம், 11-வது வட்டத்தைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்…

மேலும்...