பொது சுகாதாரத்திற்காக முதலீட்டை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு வலியுறுத்தல்!

ஜெனீவா(28 டிச 2020): பொது சுகாதாரத்தில் முதலீட்டை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் ஜெப்ரியாஸ் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்” என்று டிசம்பர் 27 சர்வதேச தொற்றுநோய் தினத்தில் டெட்ரோஸ் அதானோம் ஜெப்ரியாஸ் தெரிவித்தார். மேலும் “இது கடைசி தொற்றுநோயாக இருக்காது என்று வரலாறு நமக்குக் கூறுகிறது, தொற்றுநோய்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும்” என்று அவர் வலியுறுத்தினார்….

மேலும்...

நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் – 400 மாணவர்கள் மாயம்

நைஜீரியாவிலுள்ள நடுநிலைப் பள்ளியொன்றில் ஆயுதக் கும்பல் நடத்தி தாக்குதலுக்குப் பிறகு 400 மாணவா்கள் மாயமாகினா். அந்த நாட்டின் காட்சினா மாகாணத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது 200 மாணவா்கள் அங்கிருந்து பத்திரமாகத் தப்பினா். இதுகுறித்து அந்த மாகாண காவல்துறை செய்தித் தொடா்பாளா் காம்போ இசா கூறியதாவது: கங்காரா நகரில் மாணவா்கள் தங்கிப் படிக்கும் அரசு அறிவியல் நடுநிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த ஆயுதக் கும்பல் ஏகே 47 ரகத் துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக சுட்டது. அதனைத் தொடா்ந்து,…

மேலும்...

ஒரு ஹேப்பி நியூஸ் – உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு வழங்க அனுமதி!

லண்டன் (02 டிச 2020): பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் நிலையில் பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர். இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. லண்டன்: பிரிட்டனில்…

மேலும்...

விவசாயிகள் மீதான கொடூர தாக்குதலில் 110 பேர் படுகொலை!

நைஜீரியா (30 நவ 2020): நைஜீரியாவில் விவசாயிகள் மீதான கொடூர தாக்குதலில் 110 பேர் கொல்லப்பட் டுள்ளனர். நைஜீரியாவில் வயலில் அறுவடை செய்யும் விவசாயிகள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதமேந்திய குழு ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 110 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். ஆனால் விவசாயிகள் மீதான வெகுஜன தாக்குதல்கள் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பேராபத்து என்பதாக…

மேலும்...

கொரொனா தடுப்பூசி குறித்து ஆக்ஸ்போர்டு புதிய அறிவிப்பு!

லண்டன் (27 நவ 2020): அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிட் தடுப்பூசி புதிய வழியில் சோதிக்கப்படும் என்று ஆக்ஸ்போர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல்வேறு நாடுகளின் மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் ஆக்ஸ்போர்டு நிறுவனமமும் ஒன்று. இந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டபோது சோதனைகளில் ஒன்று எதிர் முடிவைக் காட்டிய பின்னர் செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசியின் சோதனை நிறுத்தப்பட்டது. பரிசோதனையாளர்களில் ஒருவர் எதிர் முடிவைக் காட்டியபோது சோதனை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து…

மேலும்...

ஹிஜாப் அணிவதையே விரும்புகிறேன் – மாடல் உலகிலிருந்து விலகுவதாக பிரபல மாடல் திடீர் அறிவிப்பு!

நியூயார்க் (27 நவ 2020): இஸ்லாமிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றும் விதமாக மாடல் உலகிலிருந்து விலகுவதாக பிரபல அமெரிக்க மாடல் ஹலீமா ஏடன் அறிவித்துள்ளார். ஃபேஷன் உலகில் கொடி கட்டிப் பறந்தவர் 23 வயதான அமெரிக்க மாடலான ஹலீமா ஏடன். இவர் ஹிஜாப் அணிந்து, கன்யே வெஸ்டின் யீஸி உள்ளிட்ட முக்கிய பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் தற்போது ஹிஜாப் அணிந்து மாடல் உலகில் தொடர்வது நெருக்கடியை ஏற்படுத்துவதாகக் கூறி, மாடல் உலகிலிருந்து விலகுவதாக அவர்…

மேலும்...

டிசம்பர் 20 ஆம் தேதி வரை ஊரடங்கு

ஜெர்மனி (26 நவ 2020): ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனாவால் 9.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கை பற்றி தனது அமைச்சர்களுடன் அந்நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்பொழுது, ஜெர்மனியில் நவம்பர் இறுதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது. அதனால், வரும் டிசம்பர் 20ந்தேதி…

மேலும்...

94.5 சதவீதம் திறன் கொண்ட கொரோனா தடுப்பூசிகண்டுபிடிப்பு!

நியூயார்க் (16 நவ 2020): அமெரிக்காவின் மார்டனா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மார்டனா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம்…

மேலும்...

வாம்கோ புயல் புயலுக்கு 67 பேர் பலி!

மணிலா (15 நவ 2020): பிலிப்பைன்ஸை தாக்கிய வாம்கோ புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் பிலிப்பைன்சில் இயற்கையின் ருத்ர தாண்டவமும் தொடருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2 மாதங்களாக பிலிப்பைன்சை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த புயல்கள் தாக்குகின்றன. இந்த மாத தொடக்கத்தில் கோனி என்ற சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கியது. இது இந்த ஆண்டு உலகின் மிகவும்…

மேலும்...

அமெரிக்க தேர்தல் முடிவுகள் – ட்ரம்ப் மிரட்டல்!

வாஷிங்டன் (04 நவ 2020): அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் செல்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 238 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 213 கைப்பற்றியுள்ளார். டெக்சாஸ், வட கரோலினா, ஓஹியோ மற்றும் பென்சில்வேனியா மாநிலங்கள் தேர்தல் முடிவுகளின் மாற்றும் வகையை கொண்டுள்ளன, டொனால்டு டிரம்ப் அவை அனைத்தையும் வெல்ல வேண்டும்,…

மேலும்...