இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒரு கோவில்!

Share this News:

பிரதாப்கர்(12 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒரு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்துவருகிறது. இதற்கிடையே அண்மையில் கோயம்புத்தூரில் கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க வேண்டி, கொரோனா தேவி சிலை எழுப்பப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. கேரளாவிலும் ஒருவர் கொரோனா தேவிக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்திவருகிறார்.

இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தின் சுக்லாப்பூர் கிராம மக்கள், ஒரு வேப்ப மரத்தின் கீழ் கொரோனா மாதாவிற்கு கோவில் கட்டியுள்ளனர். உள்ளூர் மக்களிடம் பணம் வசூலித்து இந்தக் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதில் உள்ள கொரோனா மாதா சிலையும் முகக்கவசம் அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *