ஹிஜாப் விவகாரம் – மாணவிகள் கல்லூரியிலிருந்து இடை நீக்கம்?

Share this News:

பெங்களூரு (19 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா கல்லூரியிலிருந்து 58 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கல்லூரி முதல்வர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஷிவமோகா மாவட்டத்தில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய கர்நாடகா கல்லூரி மாணவர்கள் 58 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட செய்தி இணையத்தில் வெளியானது.

கல்லூரி விதிகளை மீறியதால் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக முதல்வர் மாணவர்களிடம் கூறிய வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்தன.

“துணை எஸ்பி உள்ளிட்டோர் மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கவில்லை. விதிகளை மீறினீர்கள். அதனால்தான் உங்கள் அனைவரையும் கல்லூரியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம். அதிலிருந்து நீங்கள் வளாகத்திற்குள் நுழைய முடியாது. நீங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டீர்கள்,” என்று முதல்வர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ஷிவமோகா டிசி இதுகுறித்து கூறுகையில், முதல்வர் வெறுமனே மாணவர்களை அச்சுறுத்துவதற்காக வாய்மொழியாக அவ்வாறு உத்தரவு பிறப்பித்தார். இடைநீக்க உத்தரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று கூறினார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *