இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 258 ஆக உயர்வு!

Share this News:

புதுடெல்லி (21 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு உலகளவில் 2,75,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91,9121 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 11,398 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே இந்தியாவில் 258 பேர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *