பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்!

Share this News:

இந்தூர் (19 நவ 2022): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அடையாளம் தெரியாத நபர் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து மத்திய மற்றும் மாநில போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தின் ஆதாரம் குறித்து மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் வந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தது.

ஒரு இனிப்பு கடையில் தபால் மூலம் கிடைத்த மிரட்டல் கடிதத்தை கடை உரிமையாளர் உடனடியாக போலீசில் ஒப்படைத்தார். அந்த கடிதத்தில் 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து குறிப்பிடப்பட்டதாகவும், அவரது தந்தை ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட கதி தான் ராகுலுக்கும் காத்திருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ராகுலின் பாதுகாப்பை மனதில் கொண்டு, இந்தூர் காவல்துறையும், குற்றப்பிரிவும் கடிதத்தின் மூலத்தைக் கண்டறிய முயன்று வருகின்றனர். ஜூனி இந்தூர் காவல் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் கவனமாக ஆய்வு செய்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *