ஒமிக்ரான் வைரஸ் – டெல்லி ஐஐடி சாதனை!

Share this News:

புதுடெல்லி (14 டிச 2021): வெறும் 90 நிமிடங்களில் ஒமிக்ரான் தொற்று முடிவை கண்டறியும் டெஸ்ட் கிட் (பரிசோதனை கருவி) ஒன்றை உருவாக்கி உள்ளனர் ஐஐடி-டெல்லியை சார்ந்த ஆய்வறிஞர்கள்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று. இந்தியாவில் மட்டும் இதுவரை 38 பேர் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு உலக நாடுகளின் அரசுகள், வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றன .

இந்த நிலையில் வெறும் 90 நிமிடங்களில் ஒமிக்ரான் தொற்று முடிவை கண்டறியும் டெஸ்ட் கிட் (பரிசோதனை கருவி) ஒன்றை உருவாக்கி உள்ளனர் ஐஐடி-டெல்லியை சார்ந்த ஆய்வறிஞர்கள்.

RT-PCR சோதனையை அடிப்படையாகக் கொண்ட வகையில் இந்த கிட் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒமிக்ரான் திரிபுவில் மட்டுமே காணப்படும் குறிப்பிடப்பட்ட பிறழ்வுகளை (MUTATIONS) துல்லியமாக கண்டறியும் வகையில் இந்த கிட் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இதற்கான காப்புரிமைக்காக இந்திய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக குறைந்த செலவில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் டெல்லி ஐஐடி உருவாக்கி இருந்த RT-PCR சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *