விவசாயிகளுக்கு ஆதரவாக பத்ம விபூஷன் விருதை திருப்பி அனுப்பிய முன்னாள் முதல்வர்!

Share this News:

புதுடெல்லி (03 நவ 2020): விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாடல் பத்ம விபூஷன் விருதை திருப்பி அனுப்பியுள்ளார்.

மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றன.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் திருப்பி அளித்துள்ளார். மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *