இந்தியாவில் 1270 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு!

Share this News:

புதுடெல்லி (31 டிச 2021): இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,270 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமிக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 450 பேரும், டெல்லியில் 320 பேரும், கேரளாவில் 109 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 62 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு காணப்படுகிறது. தமிழகத்தில் 46 பேர் ஒமிக்ரான் பாதிப்புடன் உள்ளனர்.

கர்நாடகாவில் 34 பேரும், ஆந்திராவில் 16 பேரும், அரியானாவில் 12 பேரும் ஒமிக்ரான் தாக்குதலுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒமிக்ரான் பாதித்த 1,270 பேரில் 374 பேர் குணமடைந்து விட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் சீரான உடல்நலத்துடன் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *