சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் அடித்துக்கொலை!

Share this News:

ஷில்லாங் (12 செப் 2022): மேகாலயாவில் சிறையில் இருந்து தப்பிய நான்கு விசாரணைக் கைதிகளை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது.

மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள ஜோவாய் சிறையில் இருந்து செப்டம்பர் 10ஆம் தேதி தப்பியோடிய ஆறு விசாரணைக் கைதிகளில் 4 பேர் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் ஷாங்பங் கிராமத்தில் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், குழு ஒரு தேநீர் கடையை அடைந்தபோது, ​​உள்ளூர்வாசிகள் கைதிகளில் ஒருவரை அடையாளம் கண்டுகொண்ட கிராம மக்கள் கைதிகளை அருகில் உள்ள காட்டுக்குள் விரட்டிச் சென்று தடியடி நடத்தினர். நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நான்கு விசாரணைக் கைதிகளின் மரணத்தை உறுதிப்படுத்திய சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜே.கே.மரக், மற்ற இரண்டு விசாரணைக் கைதிகள் தப்பினார்களா அல்லது காயமடைந்தார்களா என்பது தெரியவில்லை என்றார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *