எல்லாவற்றையும் மூடி மறைக்க பார்க்கிறது பாஜக – சுப்ரியா சுலே குற்றச்சாட்டு!

Share this News:

மும்பை (19 ஜன 2020): குடியுரிமை சட்ட விவகாரத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட விவகாரங்களை பாஜக மூடி மறைக்கப் பார்க்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடிற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர். இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரியா சுலே , “தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை மூலம் பாஜக தனது பொருளாதாரத்தை இயக்க நினைக்கிறது. இந்தச் சட்ட விவகாரத்தில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் மாறுபட்ட அறிக்கைகளை வழங்குகிறார்கள். நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை மூடி மறைக்கப்படுகிறது” என தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *