இந்திய விமானங்களுக்கு தடை – கத்தார் அதிரடி அறிவிப்பு!

Share this News:

கத்தார் (09 மார்ச் 2020): இன்று அதிகாலை முதல், இந்தியாவிலிருந்து கத்தாருக்குப் புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது கத்தர் அரசு.

கொரோனா வைரஸ் (COVID-19) க்கு எதிரொலியாக, தோஹாவிற்கு வந்து செல்லும் பல்வேறு நாட்டு விமானச் சேவைகளை ரத்து செய்து வருகிறது கத்தார்.

அதன் நீட்சியாக இந்தியா, இத்தாலி, பங்களாதேஷ், சீனா, எகிப்து, ஈரான், இராக், லெபனான், நேபால், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடனான விமானத் தொடர்பினைத் துண்டித்தது கத்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த தடை என்றும், இது தற்காலிகமானது என்றும் கத்தார் அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம், இன்று அதிகாலை முதல், மேற்கண்ட நாடுகளில் இருந்து கத்தாருக்குச் செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விதியானது கத்தர் வாழ் குடிமக்கள் (Resident permit holders), ஆன் அரைவல் விசா-வில் வருவோர், டூரிஸ்ட் விசாவில் வருவோர் அனைவரைக்கும் பொருந்தும்.

இச்செய்தி,  இந்தியாவில் விடுமுறை முடிந்து கத்தார் திரும்புவோர், அலுவல் மற்றும் புதிய வேலை வாய்ப்பு காரணமாக கத்தாருக்கு பயணிப்போரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *