துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு!

Share this News:

துபாய் (10 டிச 2022): கேரளாவிலிருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800 விமானம் கேரள மாநிலம் காலிகட்டில் இருந்து சென்றது. சனிக்கிழமை துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் விமானத்தின் சரக்குக் கிடங்கில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது,

இதனை அடுத்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். மேலும் விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துபாய் விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது விமானத்தின் சரக்குக் கிடங்கில் பாம்பு ஒன்று காணப்பட்டதாகவும், விமான நிலைய தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) மூத்த அதிகாரி தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *