அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி அப்படி பேசவில்லை- பிரதமர் அலுவலகம் விளக்கம்!
புதுடெல்லி (20 ஜூன் 2020): நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் பேசியது தவறாக திசை திருப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின. தொடர்ந்து, லடாக் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கும் வகையில் பிரதமர் மோடி…