
தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓட அனுமதி!
சென்னை (22 மே 2020): தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற இடங்களில் நிபந்தனையுடன் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் பிற வாகனங்களுடன் ஆட்டோக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். எனவே, அவர்களது நிலையைக் கருத்தில் கொண்டு, ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டுமென, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்….