
ரஜினிக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றது ஏன்?: திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்!
சென்னை (24 ஜன 2020): நடிகர் ரஜினி மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்றது ஏன் என்று திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று…