திமுக முக்கிய புள்ளிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று!

சென்னை (28 செப் 2020): திமுக எம்.எல்.ஏ மா. சுப்பிரமணியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று…

மேலும்...

திமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி!

மதுரை (23 செப் 2020): அழகிரி திமுகவில் மீண்டும் இணைந்துள்ள உறுப்பினர் அட்டை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அண்மையில் தன்னை மீண்டும் திமுகவில் சேர்க்கக் கோரி வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், திமுக அதைப் பொருட்படுத்தாத நிலையில், இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் மு.க.அழகிரி பெயரில் உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறார் அவரது ஆதரவாளர் கபிலன். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பேரூர் திமுகவின் முன்னாள் செயலாளராக இருந்தவர் பெ.கபிலன். தீவிர…

மேலும்...

நீட் தேர்வு தற்கொலை விவகாரம் – ஸ்டாலினை மடக்கிய முதல்வர் எடப்பாடி!

சென்னை (15 செப் 2020): நீட் தேர்வு முறை கொண்டு வருவதற்கு திமுகவே காரணம் என்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழக சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாளாக சட்டசபை கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் நீட் தேர்வால் மன உளைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு…

மேலும்...

இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை – மக்களவையில் திமுக வாதம்!

புதுடெல்லி (14 செப் 2020): நீட் தேர்வால் இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அப்போது நீட் தேர்வு தற்கொலை குறித்த பிரச்சனையை திமுக எழுப்பியது. அப்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும்போது, ‘நீட் தேர்வின் காரணமாக 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த…

மேலும்...

விக்னேஷ் உடலுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்தச் சென்றபோது என்ன நடந்தது?

அரியலூர் (13 செப் 2020): அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். விக்னேஷ் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த சென்றபோது, அங்கிருந்த பாமகவினர் உதயநிதிக்கு எதிராக கோஷமிட்டதோடு அவரை விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர் கூறுகையில், நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் விக்னேஷ் இறந்த…

மேலும்...

திமுகவுக்கு பாஜக திடீர் பாராட்டு – இதுதான் காரணமா?

சென்னை (10 செப் 2020): திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று திமுக சார்பில் நடத்தப்பட்ட வீடியோ கார்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் 3000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். இது டெல்லி வட்டாரத்தை அசைத்துப்பார்த்துள்ளது. ஏனென்றால் தேசிய கட்சிகள் கூட இந்த அளவில் தொழில்நுட்ப பொதுக்குழுவை கூட்டியதில்லை. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் இந்த மீட்டிங் குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல்…

மேலும்...

திமுக மங்கிப் போய்விட்டது – அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கருத்து!

மதுரை (10 செப் 2020): திமுக அந்த காலத்தில் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான வேளாண் அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மதுரை வேளாண்மை கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: இன்றைக்கு முதல்வரும் துணை முதல்வரும் இந்தத் தொற்றுநோய் காலத்திலும் கடுமையாக உழைத்து மக்களுக்குத் தேவையான…

மேலும்...

கதறி, கண்ணீர் விட்ட துரைமுருகன் – அப்படி என்ன சொல்லிவிட்டார்,ஸ்டாலின்?

சென்னை (09 செப் 2020): திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியதைக் கேட்டு துரைமுருகன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனதையும், டி.ஆர்.பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதல்வர் கலைஞர் மகிழ்ச்சி அடைவார். துரைமுருகன், டி.ஆர்.பாலுவை பார்க்கும்போது கலைஞரின் முகம் தான் எனக்குத் தெரிகிறது. அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன் வகித்தப் பதவி…

மேலும்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பாராட்டு!

சென்னை (09 செப் 2020); ‘தி.மு. கழகத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் கழகப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு ஆகியோருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (09.09.2020) விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: “திரு. துரைமுருகன் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனங்கவர்ந்த தம்பியாக அதிகமதிகம் அவருடனேயே உடனிருந்து வலம் வந்தவர். கழகத்தின் கொள்கை கோட்பாடுகளில் சமரசமற்ற ஆழ்ந்த பிடிப்புள்ளவராக,…

மேலும்...

திமுகவில் போட்டி போடும் டி.ஆர்.பாலு – துரைமுருகன்!

சென்னை (03 செப் 2020): திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு மனுதாக்கல் செய்துள்ளார். தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வருகிற 9-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமின்றி காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்க உள்ளார். இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு…

மேலும்...