குறைந்து வரும் கொரோனா – தமிழக மக்களுக்கு சற்று ஆறுதல்!

சென்னை (21 அக் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6,94,030 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் புதிதாக 857 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,91,754 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில், 263 பேருக்கு கொரோனா…

மேலும்...

துபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!

துபாய் (19 அக் 2020): விசா நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் துபாய் வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் துபாய் விமான நிலையத்தில் செய்வதறியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.. துபாய் விமான நிலைய அதிகாரிகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருகை மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச…

மேலும்...

கொரோனா போய்விட்டது என்று கூறிய பாஜக தலைவருக்கு கொரோனா பாதிப்பு!

கொல்கத்தா (19 அக் 2020): மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸ் போய்விட்டது என்று கூறிய பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில பாஜக தலைவரும், மிட்னாபூரைச் சேர்ந்த மக்களவை உறுப்பினருமான திலீப் கோஷ், கடந்த சில மாதங்களாக முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக பேரணிகளை நடத்தினார். அப்போது, ‘கொரோனா வைரஸ் போய்விட்டது’ என்று கூறினார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி முதல் திலீப் கோஷ் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….

மேலும்...

ஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்கா பெரிய மசூதிக்குள் பொதுமக்கள் தொழுகைக்கு அனுமதி!

மக்கா (18 அக் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்காவிற்குள் சவூதி மற்றும் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் இன்று (18 அக்டோபர் 2020) சில விதிமுறைகளின் அடிப்படையிலும் தளர்வுகள் அடிப்படையிலும் அனுமதிக்கப் பட்டனர். ஏற்கனவே அறிவித்தபடி இன்று நடைமுறைக்கு வந்த படிப்படியான திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மக்காவிற் கு ஒரு நாளைக்கு சுமார் 40,000 வழிபாட்டாளர்கள் மற்றும் 15,000 உம்ரா யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே…

மேலும்...

உச்சம் தொடும் கொரோனா – இந்தியாவிற்கு மேலும் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (18 அக் 2020): இந்தியாவில் வரும் பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு 1.05 கோடியாக இருக்கும் என்று மத்திய அரசு நியமித்த குழு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசின் தீவிர பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கிளைகள் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. இந்த குழுவானது வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதன்…

மேலும்...

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று!

புதுடெல்லி (16 அக் 2020): காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பரவி வரும் கொரோனா தொற்று முக்கிய தலைவர்களையும் விட்டு வைப்பதில்லை. இந்நிலையில் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,.இது குறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தனிமைப்படுத்தி உள்ளேன். என்னுடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும்...

மத்திய பாஜக அரசின் மற்றுமொரு சாதனை – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (16 அக் 2020): மத்திய அரசின் மற்றும் ஒரு சாதனையாக கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானோடு போட்டி போட முடியவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியிருந்த பொருளாதாரம் கொரோனாவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு தவறிவிட்டதாகவும் பலதரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் மத்திய அரசை மீண்டும் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் பாகிஸ்தான்,…

மேலும்...

கொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு!

மாஸ்கோ (15 அக் 2020): கொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷியா அதிபர் புதின் அதிரடியாக அறிவித்தார். ’ஸ்புட்னிக் 5’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில்…

மேலும்...

இங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு!

லண்டன் (14 அக் 2020): இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மூன்றடுக்கு ஊரடங்கிற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இங்கிலாந்தின் வடக்கில் கொரோனா தொற்று பரவல் மிகவேகமாக பரவி வருகின்றது. வரவிருக்கும் வாரங்களில் இறப்புக்கள் அதிகரிக்கும் என்றும், கடந்த மாத தொடக்கத்திலிருந்து தொற்று பரவல் வேகம் அதிகரித்து வருகின்றது என்றும், துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய புள்ளிவிவரங்கள் இளையவர்களிடையே வைரஸ் விரைவாக…

மேலும்...

கொரோனா வைரஸ் – சீனாவின் அடுத்த அதிர்ச்சி!

பெய்ஜிங் (13 அக் 2020):கொரோனா வைரஸ் பரப்பும் எறும்பு தின்னியை சீனா மருந்தாக பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக சீனா முழுவதும் பரவி பின்னர் உலகம் முழுவதும் பரவிவிட்டது. கொரோனா வைரஸால் உலகமே மிகப்பெரிய அவதியில் தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. ஆனாலும், வௌவ்வால்கள், எறும்புத் தின்னிகளிடம் இயற்கையாகவே ஏராளமான கொரோனா வைரஸ்கள் இருக்கின்றன. இந்நிலையில், சீனாவில் பாரம்பரிய மருத்துவத்தில் எறும்புத் தின்னியின் செதில்களை…

மேலும்...