தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (28 ஆக 2021): இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, சனிக்கிழமை 46,759 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, கொரோனா வழக்கு தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 40,000-ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 32,801 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 4,654 வழக்குகளும், தமிழ்நாடு 1,542 வழக்குகளும், ஆந்திரப் பிரதேசம் 1,512 வழக்குகளும், கர்நாடகா 1,301 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 509 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில்…

மேலும்...

சவூதியிலிருந்து விடுமுறையில் இந்தியா சென்றவர்களுக்கு நற்செய்தி!

ரியாத் (24 ஆக 2021): சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்த இந்தியர்கள், மூன்றாம் நாட்டில் தனிமைப்படுத்தல் தேவையில்லாமல் நேரடியாக சவூதி திரும்ப முடியும் என்று சவுதி அதிகாரிகள் அறிவித்தனர். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்த இந்திய குடிமக்கள் நேரடியாக சவூதி திரும்ப முடியும் என்று சவுதி அதிகாரிகள்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை சமாளிப்பது சிரமம் – எச்சரிக்கை அறிக்கை!

புதுடெல்லி (23 ஆக 2021): நாட்டில் கோவிட் மூன்றாவது அலை அக்டோபரில் தாக்கலாம் என்றும், தற்போதுள்ள வசதிகள் மூன்றாவது அலையை சமாளிக்க போதுமானதாக இல்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் தாக்கியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது அலை அடுத்த மாதம் தாக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அறிக்கை ஒன்றை பி ரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில்,…

மேலும்...

ஆப்கானிஸ்தானில் மேலும் பல இந்தியர்கள் சிக்கித் தவிப்பு!

புதுடெல்லி (20 ஆக 2021): ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் மேலும் பல இந்தியர்களை இந்தியா கொண்டு வர சார்ட்டர்ட் விமானங்களை அனுப்ப இந்தியா அமெரிக்காவிடம் அனுமதி கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைபற்றிய நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கு சிக்கிய இந்தியர்கள் பலர் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதற்கிடையே அங்கு மேலும் சிக்கியிருக்கும் 400 க்கும் அதிகமான இந்தியர்களை இந்தியா கொண்டு வர சார்ட்டர் விமானங்களை அனுப்ப இந்தியா அமெரிக்காவிடம்…

மேலும்...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

புதுடெல்லி (19 ஆக 2021): இந்தியாவில் நேற்று கொரோனா உயிரிழப்பு நேற்று முன் தினத்தை விட சற்று அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (19.08.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 3,23,22,258 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் இந்தியா முழுவதும் 36,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 39,157 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,25,080 ஆக உயர்ந்துள்ளது….

மேலும்...

ஆப்கான் சிறையிலுள்ள இளம் பெண்ணை மீட்டுத்தர ஒன்றிய அரசுக்கு தாய் கோரிக்கை!

திருவனந்தபுரம் (19 ஆக 2021): மூளை சலவை செய்யப்பட்டு கடத்தப்பட்டு ஆப்கான் சிறையில் உள்ள மகளை மீட்டுத்தர வேண்டி தாய் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பிந்து சம்பத், இவர் ஒன்றிய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கையில், “திருவனந்தபுரத்தில் ஒரு பயிற்சி மையத்தில் இருந்த எனது மகள் நிமிஷா (பாத்திமா என பெயர் மாற்றிக் கொண்டார்) அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் மூலம் மூளை சலவை செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு…

மேலும்...

இந்தியாவுடனான வர்த்தக உறவு துண்டிப்பு – தாலிபான் அறிவிப்பு!

புதுடெல்லி (19 ஆக 2021): இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உறவை துண்டிப்பதாக தாலிபான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக அமெரிக்க ஆதரவு அரச படைகளுக்கும், அங்கு 2001க்கு முன்பு ஆட்சியில் இருந்த தாலிபன்களுக்கும் இடையே சண்டை நடந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை எந்த சண்டையுமின்றி கைப்பற்றியதால் கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் மாளிகையை கைப்பற்றிய பின்னர், போர் முடிந்துவிட்டதாக…

மேலும்...

கத்தாருக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பல்!

தோஹா (10 ஆக 2021): இந்திய கடற்படையின் கப்பல் Trikand (ஐஎன்எஸ் திரிகாந்த்) கத்தார் தலைநகர் தோஹாவை வந்தடைந்தது. ஐந்து நாள் கடற்படைப் பயிற்சிக்காக இக் கப்பல் தோஹாவிற்கு வந்திருக்கிறது. கேப்டன் ஹரீஷ் பகுகுனா தலைமையில் வந்திருக்கும் இந்தக் கப்பலை, கத்தார் கடற்படையின் பிரதிநிதிகள் வரவேற்றனர். இதில் இரு நாட்டு கடற்படைகளின் பங்கேற்புடன் கூட்டுப் பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சியில் விமானப் பாதுகாப்பு, கடல்சார் கண்காணிப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடங்கி இருக்கும். துறைமுகத்தில்…

மேலும்...

இந்திய பயணிகளை ஏற்க ஃப்ளை துபாய் விமான நிறுவனம் மறுப்பு!

துபாய் (06 ஆக 2021): இந்திய பயணிகளை ஏற்க இயலாது என்று ஃப்ளை துபாய் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று தளர்த்தியது. UAE விசா வைத்திருப்பவர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு நேற்று முதல் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கின. அதேவேளை ஃப்ளை துபாய் அல்லாத விமான நிறுவனங்களால் மட்டுமே முன்பதிவுகள் நடைபெறுகின்றன. ஆனால்…

மேலும்...

இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்காக பெருமை கொள்வோம்!

புதுடெல்லி (06 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற முடியாவிட்டாலும், இந்திய பெண்கள் பெருமையுடன் ஹாக்கி மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கப் போட்டியில், பிரிட்டனிடம் 4-3 என்ற கணக்கில் தோற்றனர். அரையிறுதி வரை சென்ற இந்திய ஹாக்கி பெண்கள் அணிக்கு இந்தியர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியும் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். We will…

மேலும்...