அமெரிக்காவில் சாதிய பாகுபாடு – இருவர் மீது வழக்கு!

நியூயார்க் (04 ஜூலை 2020): சாதிய பாகுபாட்டுடன் இரு அதிகாரிகள் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டி சிஸ்கோ நிறுவனத்தின் மீது கலிஃபோர்னியா அரசு அமைப்பு ஒன்று வழக்கு தொடுத்துள்ளது. அந்த இரு அதிகாரிகளின் பெயர் சுந்தர் ஐயர், ரமண கொப்பல்லா என்கிறது நியூயார்க் டைம்ஸ். என்ன நடந்தது? நியூயார்க் டைம்ஸ் தரும் தகவல்களின்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஓர் ஊழியரை இரண்டு மேலதிகாரிகள் தொடர்ந்து சாதிய பாகுபாட்டுடன் நடத்தி வந்துள்ளனர். அமெரிக்காவில் சாதியம் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. அதனால்…

மேலும்...

கூகுள் சி.இ ஓ சுந்தர் பிச்சை அமெரிக்க அரசின் மீது அதிருப்தி!

நியூயார்க் (23 ஜூன் 2020): வெளிநாடுகளிலிருந்து அமெரிக்‍கா வந்து பணிபுரிய அனுமதி வழங்கும் அனைத்து வகையான விசாக்‍களும் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கண்டனம் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த உத்தரவு நாளைமுதல் அமலுக்‍கு வருகிறது. கொரோனா நெருக்‍கடியால், அமெரிக்‍காவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்புகளை சரிசெய்து, உள்நாட்டினருக்‍கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில், இந்த ஆண்டு இறுதிவரை இந்த உத்தரவு அமலில் இருக்‍கும் என அவர்…

மேலும்...

இந்திய சிறுபான்மையினரின் நிலை குறித்து அமெரிக்க மத சுதந்திர அமைப்பு கவலை!

நியூயார்க் (10 ஜூன் 2020): இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் அவர்களிடம் காட்டப்படும் பாகுபாடுகள் ஆகியனவற்றைக் கவனத்தில் கொண்டு, அச்சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க மத சுதந்திர அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வலியுறுத்தியுள்ளது. எதிர்கட்சித் தலைவர்கள், பல்வேறு மதத்தவர்கள் ஆகியோரை மதிப்பது, மத ஆர்வலர்களுடனும், மதத் தலைவர்களுடனும் சகிப்புத்தன்மையையும் பரஸ்பர மரியாதையையும் வளர்த்துக் கொள்வது ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை, அமெரிக்க அரசாங்க அதிகாரிகளின் இந்தியப் பிரிவு, ஆளுங்கட்சிக்கு அடிக்கோடிட்டுக்…

மேலும்...

அமெரிக்க சம்பவத்துக்கு எதிராக போராட்டத்தில் மண்டியிட்ட கனடா பிரதமர்!

டொரன்டோ (07 ஜூன் 2020): ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்டு போலீஸ் அத்துமீறலால் சமீபத்தில் அமெரிக்காவில் உயிரிழந்தார். இதையடுத்து இன வெறி போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கனடா தலைநகரான ஒட்டாவாவில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது போராட்டக்காரர்கள் அவரை மண்டியிடக் கூறினர். இதையடுத்து அவர் மண்டியிட்டு கோஷம் எழுப்பி போராட்டத்துக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.

மேலும்...

ஃபேஸ்புக்கில் தீ

அமெரிக்காவில் பரவியுள்ள நெருப்பு ஃபேஸ்புக் நிறுவனத்தையும் சுட ஆரம்பித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பரை வெள்ளை இனக் காவலர் டெரெக் கைது செய்கிறேன் பேர்வழி என்று கழுத்தில் ஏறி அமர்ந்து கொன்றுவிட, உருவான தீப்பொறியால் போராட்டம், கலவரம், மறியல், சூரையாடல் என்று நாடு அதகளப்பட்டுக் கிடக்கிறது. நாளுக்கு நாள் உக்கிரம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது கருப்பர்களின் நீதிக்கான ஆர்ப்பாட்டம். ஆண்டாண்டு காலமாய்த் தாங்கள் நசுக்கப்படுவது பொறுக்காமல் மீண்டும் வெகுண்டெழுந்துள்ளார்கள் அம்மக்கள். மிக மிக முக்கியமானப் பிரச்சனையான இதை…

மேலும்...

பதுங்குக் குழியில் டொனால்ட் டரம்ப் – அமெரிக்காவில் அதிகரிக்கும் பதற்றம்!

வாஷிங்டன் (01 ஜூன் 2020): வெள்ளை மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புக்காக பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மே.25ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் மாளிகையை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் அவர்களைத்…

மேலும்...

அமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம் – காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு!

நியூயார்க் (30 மே 2020): கருப்பின இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் உயிரிழந்ததை அடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கடந்த 25-ம் தேதி மின்னபொலிஸ் போலீஸ் கைது செய்யும்போது உயிரிழந்தார். ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ் டெரிக் சவின் என்பவர் மண்டியிட்டதாலேயே ஜார்ஜ் உயிரிழந்தாக கூறி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள், வங்கிகள், உணவகங்கள், காவல்நிலையம் என பல இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்….

மேலும்...

அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகம்!

வாஷிங்டன் (30 மே 2020): உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகம் முழுக்க நடைபெறும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்காக, ஐ.நா சபையின் கிளை அமைப்பாகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் உலக சுகாதார நிறுவனம். சுமார் 194 நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகத் தற்போது வரை இருக்கும் நிலையில், அமெரிக்கா தற்போது இந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக…

மேலும்...

வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு!

வாஷிங்டன் (23 மே 2020): அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆளுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இதன்  பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. அதேவேளை அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “அமெரிக்காவில் தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகளை உடனடியாக…

மேலும்...

இந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம்!

வாஷிங்டன் (21 மே 2020): இந்தியாவின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் மிகைத்து நிற்கும் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் உலக அளவில் பேசுபொருளாக உள்ளது. சமீபத்தில் கொரோனா பரவலில் இஸ்லாமியர்களை மையப்படுத்தி காய் நகர்த்திய இந்திய அரசின் நடவடிக்கைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம் என எல்லாவகைகளிலும் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இந்நிலையில் இவை அரபு நாடுகளின் பார்வைக்குச்…

மேலும்...