கொரோனா – தனிமைப் படுத்தப்பட்ட நடிகர் ரஜினி – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐதராபாத் (23 டிச 2020): நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட நிலையில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக…

மேலும்...
Tabligh Jamath

விடுதலையான தப்லீக் ஜமாத்தினருக்கு உதவ வேண்டும் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (22 டிச 2020): ஒன்பது மாத சட்ட போராட்டத்திற்குப் பிறகு அணைத்து தப்லீக் ஜாமத்தினரும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப் பட்டதோடு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் நாடு திரும்ப மத்திய அரசு உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாஅத் சபையில் பங்கேற்றதன் மூலம் கோவிட் -19 மேலும் பரவியதாக அப்பாவி தப்லீக் ஜமாத்தினர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும்…

மேலும்...

கத்தாரில் கோவிட் 19 தடுப்பூசி போடப்படும் பணி டிசம்பர் 23 முதல் தொடக்கம்!

தோஹா (22 டிச 2020): கத்தாரில் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் கட்டம் (புதன்கிழமை) நாளை தொடங்கும் என்று கத்தார் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகள் முதல் கட்டமாக, நாளை டிசம்பர் 23 துவங்கி ஜனவரி 31 வரை துரிதமாக போடப்படும். முதல் கட்ட தடுப்பூசிகள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம்…

மேலும்...

சவூதியில் கோவிட் 19 காலத்தில் பெரும் சேவை புரிந்தவர்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் கவுரவிப்பு!

ஜித்தா (20 டிச 2020): சவூதி அரேபியா ஜித்தாவில் கோவிட் 19 காலகட்டத்தில் பெரும் சேவை புரிந்த மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும்  தன்னார்வலர்கள், இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர். 19 டிசம்பர் 2020 சனிக்கிழமை மாலை 09 மணிக்கு ஜித்தாவில் கோவிட் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட விழாவில் குறிப்பிட்ட அளவினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இந்தியன் சோஷியல் ஃபாரம் ஜித்தா பிரிவின் அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….

மேலும்...

சவூதி அரேபியாவைத் தொடர்ந்து குவைத் ஓமான் நாடுகளிலும் சர்வதேச விமானங்களுக்கு தடை!

மஸ்கட் (21 டிச 2020): சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஓமான் மற்றும் குவைத் நாடுகளும் சர்வதேச விமானங்களை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளன. இங்கிலாந்தில் காணப்படும் புதிய கோவிட் வைரஸ் படு வேகமாகப் பரவி வருவதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. சவூதி அரேபியா ஒரு வாரத்திற்கு தனது எல்லைகளை மூடியுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஓமான், குவைத் நாடுகளிலும் சர்வதேச விமானங்களை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளது.

மேலும்...

இந்திய இங்கிலாந்து விமான சேவை ரத்து!

புதுடெல்லி (21 டிச 2020): இந்திய இங்கிலாந்து விமான சேவையை ரத்து செய்வதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை…

மேலும்...

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் – சவூதி அரேபியாவின் அனைத்து விமானங்களும் ரத்து!

ரியாத் (21 டிச 2020): பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் புதிய கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து சவூதி அரேபியா அனைத்து சர்வதேச வர்த்தக விமானங்களையும் ஒரு வாரம் நிறுத்தியுள்ளது இந்த தகவலை சவூதி உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரத்தை மேற்கோள் காட்டி சவுதி பத்திரிகை நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது. சவூதியில் வசிக்கும் மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முற்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விமான சேவை ரத்து இருக்கும்…

மேலும்...

ஒமானில் சுற்றுலா பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் முறை ரத்து!

மஸ்கட் (17 டிச 2020): ஓமானில் சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் வருவதற்கு முன்பு அவர்களுக்கு கோவிட் ஆய்வு தேவையில்லை என்று பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் கோவிட் ஆய்வுக்கு உட்படுத்தப் படுவார்கள். அங்கு கோவிட் சோதனைக்குப் பிறகு பிறகு குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தனிமைப்படுத்தல் இருக்காது. இந்தியா உட்பட மொத்தம் 103 நாட்டினர் விசா இல்லாமல் ஓமானுக்குள் நுழைந்து 10 நாட்கள் வரை…

மேலும்...

சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (14 டிச 2020): சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐஐடி முடிவு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் 9 மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை இயங்கி வருகிறது. விடுதிகளில் வசிக்கும் 774 மாணவர்களில் இதுவரை 408 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சென்னை ஐஐடி 10 சதவீத விடுதி மாணவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

அம்பாலா (09 டிச 2020): கொரோனா தடுப்பூசி சோதனைக்காக தன்னார்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ளார். இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இதில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, மூன்றாம் கட்ட சோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில்…

மேலும்...