எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை எப்படி உள்ளது? – மகன் தகவல்!

சென்னை (17 செப் 2020): கொரோனா பாதித்து தொடர் சிகிச்சையில் இருந்து வரும் ‘எஸ்.பி.பி. உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். ‘எக்மோ’ மற்றும் ‘வென்டிலேட்டர்’ உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது” என அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார். கடந்த மாதம் 5ம் தேதி முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் எஸ்பிபி. . அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

மேலும்...

உள்ளே இருந்தவர்தான் கமல்ஹாசன் – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

சென்னை (16 செப் 2020): பிக்பாஸை தொகுத்து வழங்கும் கமல் கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் வீட்டில் அடைந்து கிடந்தவர்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை, கிண்டி ஹால்டா அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “, 17 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது!

புதுடெல்லி (16 செப் 2020): இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி, 50 லட்சத்து 20 ஆயிரத்து 360 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,…

மேலும்...

கொரோனாவால் தமிழகத்தில் குழந்தைகள் பெருமளவில் பாதிப்பு!

சென்னை (15 செப் 2020): தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 78 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,153 ஆண்கள், 2,599 பெண்கள் என மொத்தம் 5,752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 156 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 770…

மேலும்...

எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா மீண்டும் அனுமதி!

புதுடெல்லி(13 செப் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்ட அமித்ஷா, கொரோனா நெகட்டிவ் ஆன நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அமித்ஷா மேலும் சில நாள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்...

எடப்பாடி, ஓபிஎஸ் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியீடு!

சென்னை (12 செப் 2020): முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. வரும் 14-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது….

மேலும்...

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி (கோவாக்சின்) சோதனையில் முன்னேற்றம்!

புதுடெல்லி (12 செப் 2020): கொரோனாவிற்கான தடுப்பூசியில் இந்தியாவின் கண்டுபிடிப்பான (கோவாக்சின்) சோதனை முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜூலை மாதம் 23-ஆம் தேதி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் சென்னை காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் தடுப்பூசி…

மேலும்...

முதல்வர் எடப்பாடி உட்பட எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை!

சென்னை (11 செப் 2020): தமிழகத்தில் சட்டசபை கூட்டம் கூட உள்ளதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபையை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…

மேலும்...

கொரோனா நெகட்டிவ் எனினும் எஸ்பிபிக்கு இந்நிலையா?

சென்னை (08 செப் 2020): பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா சோதனை நெகட்டிவ் என்றபோதிலும் நுரையீரல் முன்னேற்றம அடையவில்லை. கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அவரது மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது தந்தைக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்…

மேலும்...

தமிழகத்தில் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது!

சென்னை (08 செப் 2020): தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து 50 சதவீதம் மற்றும் ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொது பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கடந்த 5 மாதங்களாக பஸ்கள் அந்தந்த பணிமனையிலேயே நிறுத்தப்பட்டன. டிரைவர்-கண்டக்டர்களும் ஓய்வில் இருந்தார்கள். இந்தநிலையில் ஒவ்வொரு முறையும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த மாதம்…

மேலும்...