கோவை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை – பாஜக பதில்!

Share this News:

சென்னை (28 அக் 2022): கோவையில் அக்டோபர் 31 ஆம் தேதி முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை என அண்ணாமலை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பாஜக சார்பில் அக்டோபர் 31 ஆம் தேதி கோவையில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த முழு அடைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும், கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்ரவர்த்தி அமர்வில் அவசர வழக்காக இன்று (அக்.,28) விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரனையின்போது அண்ணாமலை சார்பில் பதிலளிக்கப்பட்டது. அப்போது கோவையில் மாவட்ட தலைமை மட்டுமே அழைப்பு விடுத்தது. எனினும் மாநில தலைமை இதுவரை அதுகுறித்து எந்த அழைப்பும் விடுக்கவில்லை எனவும் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் பதிலளிக்கப்படது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *