அதிமுக, பாஜக கூட்டணி முறிவு – தேர்தலில் பாஜக தனித்து போட்டி!

Share this News:

சென்னை (31 ஜன 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். பாஜக தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தனித்துப் போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்து போட்டியிடுவதாகவும், அவர் தெரிவித்தார்.

அதிமுகவுடனான கூட்டணி இடப்பங்கீட்டில் இழுபறி நீடித்துவந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *