நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு!

Share this News:

சென்னை (08 ஆக 2021): நடிகை மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பட்டியலின் சமூகத்தினரை பற்றி சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் நேற்று (07/08/2021) புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் நடிகை மீராமிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *