கொரோனா பரவல் – ஹாட் ஸ்பாட்டாகும் தஞ்சாவூர் மாவட்டம்!

Share this News:

தஞ்சாவுர் (18 மார்ச் 2021); கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், மக்களின் அலட்சியப்போக்கு மற்றும் முகக்கவசம் அணியாமல் இருப்பது, கொரோனா விதிகளை பின்பற்றாமல் இருப்பது போன்றவற்றால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கும்பகோணத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனேவே, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை , பட்டுக்கோட்டை உள்ளிட்ட பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கும்பகோணத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது , இது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *