உதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்!

Share this News:

சென்னை (25 அக் 2020): சென்னை அண்ணா அறிவாலயத்தின் வாசலில் , ‘ஸ்டாலின் வாழ்க; உதயசூரியன் ஒழிக’ என திமுக தொண்டர்கள் சிலர் கோஷம் எழுந்திருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. குமரகுருவுடன் திருவெண்ணெய்நல்லூர் தி.மு.க கிழக்கு ஒ.செ துரைராஜும், கள்ளக்குறிச்சி தி.மு.க மா.செ உதயசூரியனும், நெருக்கமாக இருப்பதாகவும் இதனால்தான் குமரகுரு மூன்று முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்றும் அந்தப் பகுதி தி.மு.க.வினருக்கு நீண்ட நாட்களாக கோபம்.

இந்த விவகாரத்தை கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சொல்வதற்காக அவர்களில் சிலர் அறிவாலயத்துக்கு வந்துள்ளனர். அங்கே தி.மு.க தலைவர் ஸ்டாலினைப் பார்த்ததும், ‘ஸ்டாலின் வாழ்க’ என்றும் ‘மா.செ. உதயசூரியன் ஒழிக’ என்றும் கோஷம் போட்டு எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.

இதுகுறித்து திமுகவினர் சிலர் கூறும்போது, இது நீண்ட நாள் தொடர்கதையாக உள்ளது. திமுக தலைவர் இப்போதாவது இதற்கு முடிவு காட்டுவார் என எதிர் பார்ப்பதாக தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *