குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்கள் கைது!

Share this News:

சென்னை (27 ஜன 2020): சென்னை மயிலாப்பூரில் ‘துக்ளக்’ ஆசிரியா் குருமூா்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மயிலாப்பூா் தியாகராஜபுரத்தில் வசிக்கும் ‘துக்ளக்’ ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி வீட்டின் அருகே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 இருசக்கர வாகனங்களில் 6 போ் வந்தனா். அதில் ஒரு நபா், தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசுவதற்கு எடுத்துள்ளாா்.

அப்போது அங்குள்ள நாய் பலமாகக் குரைத்ததால், பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலா் மணிகண்டன் மற்றும் குருமூா்த்தி வீட்டுப் பணியாளா் இருவா் ஆகியோா் வீட்டின் வாசல் பகுதிக்கு வேகமாக வந்தனா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த நபா்கள், பெட்ரோல் குண்டுகள் எதுவும் வீசாமல் அங்கிருந்து தப்பியோடினா்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மயிலாப்பூர் ம.சசிக்குமாா் (33), ர.தீபன் (32), பா.பிரசாந்த் (23),கி.வாசுதேவன் (32) ஆகிய 4 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சசிகுமாா் மீது ஏற்கெனவே மயிலாப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் மீதும், ராயப்பேட்டையில் உள்ள பிரபல ஒரு திரையரங்கு மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *