பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டாலின் கே.எஸ்.அழகிரி சந்திப்பு!

Share this News:

சென்னை (18 ஜன 2020): பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தியுடன் வெளியிட்ட கருத்து மற்றும் அதனைத் தொடர்ந்து தலைவர்களின் வார்த்தை மோதல், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவியது.

இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் இன்று மதியம் அண்ணா அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, “திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதற்கு பிறகும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும். கூட்டணியில் ஆரோக்கியமான விவாதம் வந்து செல்லும்.

இனி கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் எழுந்தால் நானும் மு.க.ஸ்டாலினும் பேசிக்கொள்வோம். மற்றவர்கள் யாரும் பேசத் தேவையில்லை” என்றார்


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *