சென்னை (28 செப் 2021):பத்திரிகையாளர்களை அவமரியதையாக விமர்சித்த பாஜக எச்.ராஜாவை புறக்கணிக்க பத்திரிகையாளர்கள் மன்றம் முடிவெடுத்துள்ளது.
நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், எச்.ராஜா பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பல தரப்பிலும் கண்டனம் எழுந்தது.
இதனை அடுத்து எச்.ராஜா நேர்காணல்களை புறக்கணிக்க சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் முடிவெடுத்துள்ளது.