நீட் தேர்வு ஆய்வறிக்கை என்ன சொல்கிறது? – நீதிபதி ஏ.கே ராஜன் விளக்கம்!

Share this News:

சென்னை (14 ஜூலை 2021): நீட் தேர்வு  ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி  ஏ.கே ராஜன் குழு இன்று சம்பர்ப்பித்தது.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய கடந்த மாதம் 10-ம் தேதி நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கருத்துக்களை பெற்று அதுதொடர்பான அறிக்கையை தயார் செய்து இன்று அந்த அறிக்கை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருப்பதாக அறிக்கையை சமர்ப்பித்த நீதிபடி ஏ.கே ராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அறிக்கை சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே ராஜன், “நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது பற்றி 165 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எங்களது தனிப்பட்ட கருத்துக்களை நாங்கள் ஆய்வு அறிக்கையில் முன் முன்வைக்கவில்லை. ஆய்வு திருப்திகரமாக இருந்தது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் 86,342 பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள். இதில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இது ஒரு வாக்கெடுப்பு போல் கிடையாது. பல்வேறு கருத்துக்கள் இருந்தது அனைத்து கருத்துக்களை நாங்கள் ஆய்வறிக்கையில் சமர்ப்பித்து இருக்கிறோம்” என்றார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *