ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழருவி மணியன் பகீர் தகவல்!

Share this News:

சென்னை (28 டிச 2020): ரஜினியின் உடல் சரியில்லாத நிலையில் தமிழருவி மணியனின் பேட்டி, ரஜினியின் நல விரும்பிகளை பதற வைத்துள்ளது.

ரஜினி ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில் மருத்துவமனை அறிவுறுத்தலின் படி, ரஜினிகாந்த் ஒரு வார காலத்துக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும்; கொரோனா தாக்கக் கூடிய சூழ்நிலைகளில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியிருந்தது. இதனால் ஏற்கனவே ரஜினிகாந்த் திட்டமிட்டபடி டிசம்பர் 31-ல் புதிய கட்சியின் பெயரை அறிவிப்பது சாத்தியம் இல்லை; கட்சி தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கவும் வாய்ப்பில்லை என்பதும் உறுதியானது.

ஆனால் இதுகுறித்து எதுவுமே தகவலை கொள்ளாமல் ஆங்கில சேனலுக்கு நேற்று ரஜினிகாந்த் கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஒரு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், ரஜினிகாந்த் திங்கள்கிழமையன்றுதான் ஐதராபாத் திரும்புகிறார்; ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தப் போகிறேன்; டிசம்பர் 31-ந் தேதி திட்டமிட்டபடி கட்சியின் பெயர் அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார்.

இப்படி நினைத்ததை தமிழருவி மணியன் பேசியுள்ளதற்கு ரஜினியின் நல விரும்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *