கின்னஸ் சாதனை விருது பெற்ற கோவை மருத்துவர்!

Share this News:

கோவை (14 ஜன 2020): கோவை மருத்துவர் அரவிந்த் சங்கருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.

குழந்தையின்மை சிகிச்சையில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்கும் நிலையில், முதன்முறையாக குழந்தையின்மை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஆண்களுக்கும் ஏற்படுத்தும் வகையில், “குழந்தையின்மையில் ஆண்களின் பங்கு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு கோவை ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் அதிக அளவிலான ஆண்களைப் பங்கேற்க வைத்ததன் அடிப்படையில் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தின் முதன்மை மருத்துவர் அரவிந்த் சந்தருக்கு கின்னஸ் சாதனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

“குழந்தையின்மை சிகிச்சை குறித்து ஆண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதுபோன்ற முயற்சி முதன்முதலாக இங்குதான் மேற்கொள்ளப்பட்டது. தவிர அதிக அளவில் ஆண்கள் பங்கேற்றதும் இக்கருத்தரங்கில்தான். அதன் அடிப்படையில் கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது” என மருத்துவர் அரவிந்த் சந்தர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *