மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி திட்டவட்டம்!

Share this News:

பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மேலும் ராஜினி வீடு முற்றுகை இடப்படும் என பெரியார் அமைப்புகள் தெரிவித்துள்ளன. திக தலைவர் கி.வீரமணி ரஜினி தக்க விலை கொடுத்தாக வேண்டும் என தெரிவித்துள்ளதோடு, ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இன்று செயத்தியாளர்களை சந்தித்த ரஜினி, outlook பத்திரிகையின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே பேசினேன், எனவே மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *