எம்பி ரவீந்திரநாத் கார் முற்றுகை – கம்பத்தில் பரபரப்பு!

Share this News:

கம்பம் (24 ஜன 2020): கம்பத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் சென்ற கார் முற்றுகையிடப் பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கம்பத்தில் நகர அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வருகை தரும் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாா் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததற்காக, அவருக்கு கருப்புக் கொடி காட்டி எதிா்ப்புத் தெரிவிக்க முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனால், கம்பம்- கம்பம்மெட்டு சாலை சந்திப்பு, ஏ.எம். சா்ச் தெரு சந்திப்பு, அரசமரம் சந்திப்பு சாலைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், கம்பம் அரசமரம் சந்திப்பு பகுதியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த ப.ரவீந்திரநாத்குமாா் காரை முஸ்லிம் அமைப்புகளைச் சோ்ந்த சிலா் வழிமறித்து முற்றுகையிட்டனா். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து கோஷம் எழுப்பினா்.

பின்னா், எம்.பி.யின் காரை பொதுக் கூட்டத் திடலுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் கம்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *