இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் – அதிர வைக்கும் தகவல்!

Share this News:

புதுடெல்லி (04 மார்ச் 2020): இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

தில்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமையான இன்று இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட இதுவரை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 28 பேருக்கு மருத்துவப் பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் ஆக்ராவுக்கு சுற்றுலா வந்த போது அவருடன் பழகிய 6 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்ராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து டெல்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *