சிறையிலிருக்கும் பத்திரிகையாளர் சித்திக் காப்பானை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (24 அக் 2020): உத்தரபிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் கப்பனை சந்திக்க மதுரா சிறை அதிகாரிகளும் நீதிமன்றமும் அனுமதிக்கவில்லை என்று சித்திக்கின் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ் கற்பழிப்பு குறித்து புகார் தகவல் சேகரிக்க உத்தரபிரதேசத்தில் இருந்த சித்திக் கப்பன், யுஏபிஏ மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சித்திக் கேரள பத்திரிகையாளர்கள் சங்கத்தின் டெல்லி பிரிவு செயலாளர் ஆவார்

இந்நிலையில் சித்திக் காப்பானை சந்திக்க மறுப்பது அனைத்து நடைமுறைகளையும் மீறுவதாகும். என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் சித்திக் மீதான ஜாமீன் மனு திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *