அர்னாபுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சித்திக் காப்பானுக்கு இல்லை – கபில் சிபல் காரசார வாதம்!

Share this News:

புதுடெல்லி (11 நவ 2020): அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மீதான விசாரணையின்போது, மலையாள பத்திரிகையாளர் சித்திக் காப்பானின் விடுதலைதான் மிக முக்கியமானது, அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் முக்கியமல்ல என்று கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.

ஹத்ராஸ் சம்பவத்தை கவரேஜ் செய்ய சென்ற மலையாள பத்திரிகையாளர் சித்திக் கப்பனை உ.பி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது விடுதலை மீதான விசாரனை மனுவை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அர்னாபின் மீதான ஜாமீன் மனு உடனடி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. இதுபோன்ற விஷயங்கள் இந்த நாட்டில் நடக்கின்றன ‘என்று கபில் சிபல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட சித்திக் காப்பான் மீதான மனு குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்காமலேயே நீதிமன்ற இன்றைய நிகழ்வு நிறைவடைந்தது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *