தஞ்சை, பட்டுக்கோட்டை,மதுக்கூரில் பரவும் கொரோனா!

CORONA-India CORONA-India
Share this News:

தஞ்சாவூர் (16 மார்ச் 2021): தஞ்சாவூர் அருகே 56 மாணவிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே தஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளில் கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மதுக்கூர் அருகே ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *