ஜெர்மனி பெல்ஜியம் நாடுகளில் மழை வெள்ளத்தால் 1300 பேர் மாயம்!

Share this News:

ஜெர்மனி (17 ஜூலை 2021): மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1300 பேர் மாயமாகியுள்ளனர். 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவில் வியாழன் அன்று பெரும் மழை பொழிவு ஏற்பட்டதால், பல நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைகள் உடைந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் பாய்ந்தது. ரைன், அஹர், மீசே ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்கு பெரிய அளவில் உருவானதால், ஜெர்மனியின் தென் மேற்கு பகுதிகளில் ஏராளமான வீடுகள், குடியிருப்புகள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஜெர்மனியின் அண்டை நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க், சுவிஸ்சர்லாந்த் ஆகிய நாடுகளிலும் வெள்ளச் சேதம் ஏறப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 81 பேரும், பெல்ஜியத்தில் 11 பேரும் மழை வெள்ளத்திற்கு பலியாகினர்.

ஒரு சில கரையோர கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி மாயமான ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *