அப்போது ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு – அந்தர் பல்டி அடித்த ஓபிஎஸ்!

Share this News:

சென்னை (22 மார்ச் 2022): ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விமர்சித்து வந்த ஓ.பன்னீர் செல்வம் திடீரென அப்படி எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்றும் இன்றும் ஓபிஎஸ் ஆஜராகி பதிலளித்து வந்தார்.

இந்நிலையில் விசாரணையின் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஆணையத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளேன். உண்மையை ஆணையம் கண்டறிய வேண்டும். என்றார்.

மேலும் சசிகலாவை ‘சின்னம்மா’ என்று அழைத்த ஓபிஎஸ், ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எதுவும் இல்லை என தெரிவித்தார். ஆனால் ஏற்கனவே ஜெ. மரணம் குறித்து ஓபிஎஸ், சந்தேகம் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *