திமுகவை எதிர்த்து போராட காங்கிரஸ் முடிவு!

Share this News:

ஸ்ரீபெரும்புதுார் (01 ஏப் 2022): பேரூராட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத திமுகவை எதிர்த்து காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு போராட திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,- – ஆறு; சுயேச்சை – நான்கு; அ.தி.மு.க.,- – மூன்று; பா.ம.க.,- மற்றும் காங்.,- தலா ஓரிடம் வென்றன.தி.மு.க., தலைமை கழகம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவர் பதவியை, காங்.,குக்கு ஒதுக்கியது.

கடந்த 2ம் தேதி நடந்த தலைவர் தேர்தலில் தி.மு.க., உத்தரவை மீறி, தி.மு.க.,வைச் சேர்ந்த சாந்தி போட்டியிட்டு, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றார்.இதையடுத்து, கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடத்தில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், பதவியை ராஜினாமா செய்து, தன்னை நேரில் சந்திக்குமாறு முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

ஆனால் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் வெற்றி பெற்ற தி.மு.க., தலைவர் சாந்தி மட்டும், ராஜினாமா செய்யாமல் உள்ளார்.ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காங்.,கைச் சேர்ந்த செல்வமேரி, கிறிஸ்துவர்.

இவருக்கு தி.மு.க., நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக, சிறுபான்மையினர் கோபத்தில் உள்ளனர்.காங்., சிறுபான்மை பிரிவு சார்பில், தமிழகம் முழுதும் சிறுபான்மையினர் இணைத்து, தி.மு.க.,வுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டு வருவதாக, காங்., சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதேபோல தமிழகத்தின் சில பகுதிகளில் திமுகவினர் ராஜினாமா செய்யாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *