இந்நேரம்

பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை பகுதி 1 – சந்தையில் விளைந்த சண்டை!

இப்போது நான் சொல்லப் போவது முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல. முழுக்க முழுக்க உண்மையும் அல்ல. இதில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் கற்பனை என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இதில் வரும் கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். இல்லை என்று மறுப்பதற்கில்லை. இருந்தாலும் ‘கதை’ என்ற சொல்லுக்கு ஒரு கவர்ச்சி உண்டு என்பதால் நானும் இதை ‘கதை’ என்றே சொல்லப் போகிறேன். நீங்களும் அவ்வப்போது ‘ம்..’ போட மறந்து விடாதீர்கள். இந்தக் கதையின்…

மேலும்...

ஸ்விஸ் வங்கியும் சில்லறைப் பொய்களும்!

கடல் போன்று, கற்பனையெல்லாம் தாண்டிநிற்கும் மாபெரும் திடல்போன்று, பரந்து விரிந்திருக்கிறது இணையத்தின் மடல்வெளி. இவ்வெளியில் நல்ல பல மீன்களையொத்த செய்திகள், தகவல்கள் இவற்றுடனே தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் ஊறு விளைவிக்கும் விஷ ஜந்துக்களும் உலா வருகின்றன.

மேலும்...

மாட்டிறைச்சிக்காக மற்றொரு முஸ்லிம் அடித்துக் கொலை!

போபால் (20 மே 2018): மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்றதாக மற்றொரு முஸ்லிம் படுகொலை செய்யப் பட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் சட்னா மாவட்டம் அம்கார் என்ற பகுதியில் ஆறு பேர் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக கூறப் படுகிறது. அவர்களை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் ரியாஸ் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இது தொடர்பாக ஐந்துப் பேர் கைது செய்யப் பட்டு விசாரணை…

மேலும்...

மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் கோடிகளில் நன்கொடை வசூலித்த பாஜக!

மும்பை (17 டிசம்பர் 2015): மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் ரூ.2.5 கோடி நன்கொடை வசூலித்த பாஜக: தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் அம்பலம்! மாட்டிறைச்சி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக, அதே மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.2.5 கோடியை நன்கொடையாக பெற்ற தகவல் தற்போது அம்பலமாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கும் பணியில் கடந்த ஆண்டு மும்முரமாக ஈடுபட்டன. ரூ.20 ஆயிரத்துக்கு மேலான…

மேலும்...
இழிந்த சாதி (கவிதை)

இழிந்த சாதி (கவிதை)

தேர் வராது என்றவர்கள் தேர்தல் வருகிறது என்றதும் சேரிக்குள் நடந்து வந்து செல்லங் கொஞ்சுகிறீர்கள்! நீர்பிடிக்கவும், பிணம் அடக்கவும் வேறிடம் உனக்கு என்றவர்கள் ஓட்டுப் போட மட்டும் வா என்னோடு என்கிறீர்கள். செருப்பணிந்து நடக்காதே என்று உத்தரவிட்டவர்கள் செருப்பாய்த் தேய்வேன் என்று சத்தியம் செய்கிறீர்கள். பக்கம் பக்கம் நின்று படமெடுத்துக் கொள்கிறீர்கள் பாம்பின் விஷம்போல பாகுபாட்டை ஒளித்துவைத்து. இந்தியச் சம்பந்தம் பேசுகிற உங்களால் இரத்தச் சம்பந்தம் பேச முடிவதில்லை. பதவியெனும் வேசியின் பார்வைக்கு ஏங்கும் உங்கள் ‘பண்பாட்டை’…

மேலும்...

பாவம் ஜனங்கள் கட்சியும் பீதியில் ஜெயிக்கும் பிளானும் (சிறுகதை)

“என்னது, எங்க வீட்டு மேலேயே நானே பாம் வீசணுமா?” – கேள்வி கேட்ட திருநாவுக்கரசனை முறைப்பது போல பார்த்தார் பித்தளையழகன், பாவம் ஜனங்கள் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர். “எலே, குமரா, இவங்கிட்ட ஒண்னும் சொல்லலையாலே…” என்று அருகிலிருந்த சகா எலை.குமரனைப் பார்த்து எரிச்சலாகக் கேட்டார். எலை.குமரன் உடனடியாக தலைவருக்கு அந்தப் பக்கமாக அமர்ந்திருந்த எஸ்.ஓஜாவைப் பார்த்து “நீங்க சொல்லலையா?” “சொழ்ழேன்ல” என்றார் ஓஜா, வெற்றிலைப் பாக்கை மென்றபடி. மீண்டும் திருநாவுக்கரசை தன்னருகே வரும்படி சைகையில் அழைத்தார்….

மேலும்...
ரமளான் பிறை காண பொதுமக்களுக்கு அழைப்பு!

இந்தியா – இடைவெளிகளின் தேசம்!

உலகின் மிகப்பெரிய நகரத்தின் ஒதுக்கப்பட்ட பகுதியாக அந்தச் சேரிப்பகுதி. மும்பையின் ரஃபீக்நகர் தான் அது. மூங்கில் எலும்புகளில் தார்ப்பாய்களை தோலாகப் போர்த்தியிருக்கும் அந்தக் குடியிருப்புகளில் தெளிந்த குடிநீர் கூட கிடைப்பதில்லை. குடிசைக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய நீலநிற உருளை வடிவக் கலையங்களில் கலங்கலான பழுப்புநிற நீர், புழுக்கள் மிதக்கக் கிடைக்கிறது. சங்கிலியிடப்பட்டு ஒரு குவளையும் உண்டு. திட்டமின்மையையும் ஒழுங்கின்மையையும் பறை சாற்றியபடி தலைக்குமேல் செல்லும் சட்ட விரோத மின்னிழைகள் வழியாக ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது மின்சாரம். இதனினும்…

மேலும்...