திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

சென்னை (08 ஜூன் 2020): திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெ.அன்பழகன்,61 இவருக்கு, சில நாட்களுக்கு முன் , மூச்சு திணறல் ஏற்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கடந்த, 4ம்தேதி, வென்டிலேட்டர் வாயிலாக, 80 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என,…

மேலும்...

கட்சி தலைமை மீது கடுங்கோபத்தில் வைத்தியலிங்கம் – முக்கிய முடிவெடுக்கவுள்ளதாக தகவல்!

சென்னை (08 ஜூன் 2020): அதிமுகவில் முக்கிய மாற்றங்கள் நடைபெறவுள்ளதாகவும் அதில் கட்சி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்துக்கு முக்கிய பதவி அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு கட்சிப் பதவிகளில் சிலரை மாற்ற அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. கட்சியில் சில மாவட்ட செயலாளர்களும் மாற்றப்பட உள்ளார்களாம். விரைவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் கலந்தாலோசித்து, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு…

மேலும்...

சென்னை குறித்து அதிர்ச்சித் தகவல் – பிரபல பத்திரிகையாளரின் பதற வைக்கும் பேட்டி!

சென்னை (08 ஜூன் 2020): சென்னையில் பரவும் கொரோனா குறித்தும், வெளியில் சுற்றாதீர்கள், மருத்துவமனைகளில் உரிய படுக்கைகள் இல்லை என்று கண்ணீர் உடன் பேசியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “ஒரு முக்கியமான விஷயம். இன்று காலை எனக்கும், என் தம்பிக்கும்…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைப்பு!

சென்னை (08 ஜூன் 2020): பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின்…

மேலும்...

கொரோனா அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு தேர்தல் நடத்தப்படுமா?

சென்னை (07 ஜூன் 2020): கொரோனா அறிகுறி இருந்தால் அந்த மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 15-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆசிரிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை அவசியம் என தெரிவித்துள்ளது. பள்ளி நுழைவாயிலேயே அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு 97 டிகிரி வரை வெப்பநிலை…

மேலும்...

சென்னை கொத்தவால் சாவடி மூடல்!

சென்னை (07 ஜூன் 2020): நாடு முழுவதும் தமிழகம் உள்பட கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மொத்தம் 1,458 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2…

மேலும்...

திமுக ஒப்பந்தமிட்டுள்ள பிரசாந்த் கிஷோர் நிறுவனம் திடீர் மூடல்!

சென்னை (07 ஜூன் 2020): சென்னை, அண்ணா நகரில் உள்ள பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ அலுவலகம் திடீரென மூடப்பட்டு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் பணிகளுக்கு திட்டமிட, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் தி.மு.க. தலைமை ஒப்பந்தம் செய்தது. பிரசாந்த் தலைமையிலான ‘ஐபேக்’ நிறுவனத்தின் சார்பில் 234 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு களப்பணி துவக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் ‘ஒருங்கிணைவோம் வா’ செயல் திட்டத்தால், சில மாவட்ட செயலர்கள் மற்றும் அக்கட்சியின் தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்…

மேலும்...

ஃபீஸ் 10 ரூபாய் போதும் – வாடகையே வேண்டாம்: நெகிழ வைத்த பட்டுக்கோட்டை டாக்டர்!

பட்டுக்கோட்டை (06 ஜூன் 2020): கொரோனா காலத்தில் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவிக்கும் கடை வியாபாரிகளிடம் பட்டுக்கோட்டை டாக்டர் கூறிய வார்த்தை பலரையும் நெகிழ வைத்துள்ளது. பட்டுக்கோட்டையில் டாக்டர் ஒருவர் தனக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் கொரோனா லாக்டெளனால் கடைகள் திறக்காமல் போனதில் வருமானம் இல்லாமல் தவித்ததைக் கவனித்துள்ளார். இதையடுத்து, அவர்களிடம் மூன்று மாதவாடகை தர வேண்டாம் எனக் கூறி நெகிழ வைத்திருக்கிறார். பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய தெருவில் கிளினிக்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல் நிலை எப்படி உள்ளது? – மருத்துவமனை தகவல்!

சென்னை (06 ஜூன் 2020): திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை மருத்துவர்…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார்!

புதுடெல்லி (05 ஜூன் 2020): ஒளிபரப்பு விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து ரிபப்ளிக் டிவி, மற்றும் அர்ணாப் கோஸ்வாமி உள்ளிட்டவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி மற்றும் அதன் தலைமை செய்தியாளர் அர்ணாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் வெறுப்பூட்டும் பேச்சுக்களையும், விவாதங்களையும் தொடர்ந்து நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஒளிபரப்பு வழிகாட்டுதல்களை மீறியதாகக் ரிபப்ளிக் தொலைக்காட்சி, மற்றும் அதன் ஹோல்டிங்…

மேலும்...