வரி ஏய்ப்பு – இளையராஜாவுக்கு ஜி.எஸ்.டி ஆணையம் இறுதி நோட்டீஸ்!

Share this News:

சென்னை (26 ஏப் 2022): வரி பாக்கி ரூ.1.87 கோடி ரூபாயை செலுத்தக் கோரி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரிபாக்கியை கட்ட வேண்டி ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று இளையராஜாவுக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..அதில், சேவை வரி கட்டாததால், சேவை வரி ஏய்ப்பு தடுப்பு சட்டத்தின்படி, விசாரணைக்காக 2022 மார்ச் 10ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை உடன் எடுத்து வரும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையில் இருந்து மார்ச் 21-ம் தேதி மீண்டும் இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு இளையராஜா தரப்பில் பதில் எதுவும் இல்லை.

இந்நிலையில் தற்போது வரி ஏய்ப்பு குறித்து விளக்கம் அளிக்கக்கோரி 3 முறை சம்மன் அனுப்பப்பட்டதாக ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது. மேலும் 3 சம்மன்களுக்கும் இளையராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் அவருக்கு இறுதி நோட்டீஸை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

சமீபத்தில் இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து சிக்கலை சிக்கியுள்ள நிலையில் வரிஏய்ப்பு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *