கொரோனா – தனிமைப் படுத்தப்பட்ட நடிகர் ரஜினி – ரசிகர்கள் அதிர்ச்சி!

Share this News:

ஐதராபாத் (23 டிச 2020): நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட நிலையில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் ரஜினிக்கு நெகட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னைப் படுத்திக் கொண்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் ரஜினி சென்னை திரும்ப இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் அண்ணாத்த குழுவினருக்கு கொரோனா பாதிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *