விஜய் சேதுபதி மீதான தாக்குதலுக்கு காரணம் என்ன? – போலீசார் விளக்கம்!

Share this News:

பெங்களூரு (05 நவ 2021): பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை தாக்கிய வழக்கில் ஜான்சன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

செவ்வய்கிழமை அன்று பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை ஒருவர் திடீரென தாக்கினார். இந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் தாக்கிய ஜான்சன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். புகைப்படம் எடுப்பது தொடர்பாக விமானத்தில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஜான்சன் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டார், ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால் விஜய் சேதுபதியால் அனுமதி மறுக்கப்பட்டது. இதுவே ஆத்திரமூட்டலுக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

அதேவேளை. இந்த வழக்கில் தனக்கு விருப்பமில்லை என போலீஸாரிடம் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வீடியோ வைரலானதையடுத்து பெங்களூரு போலீசார் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *