டெல்லியில் சாக்கடையிலிருந்து மேலும் இரு உடல்கள் மீட்பு – பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

Share this News:

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட உடல்கள் பல இடங்களில் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேலும் இரு உடல்கள் சாக்கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது.

இந்நிலையில் தற்போதைய தகவல்படி இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் டெல்லி காகன்விஹார் பகுதியில் சாக்கடையிலிருந்து இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லி சம்பவங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *