ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி!

Share this News:

நெல்லூர் (29 டிச 2022): ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பேரணியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியின் போது இந்த விபத்து ஏற்பட்டது. கந்துகூரில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது இந்த சோகம் ஏற்பட்டது.

பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு நகருக்கு சந்திரபாபு நாயுடு சென்றடைந்ததும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதுவே இந்த சோகத்திற்கு வழிவகுத்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர். கூட்டம் அலைமோதும்போது சிலர் வாய்க்காலில் தவறி விழும் நிலை ஏற்பட்டது.

பேரணிக்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் வந்ததால் ஏற்பாட்டாளர்கள் திணறினர். இதற்கிடையில், தெலுங்கு தேசம் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதில் பொதுமக்கள் ஓடிக்கொண்டிருந்தபோது சிலர் வாய்க்காலில் விழுந்தனர். பலத்த காயமடைந்த 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *