ஹிஜாப் தடையை எதிர்த்து மார்ச் 17 அன்று மாநிலம் தழுவிய பந்த்!

Share this News:

பெங்களூரு (16 மார்ச் 2022): மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் 17 மார்ச் வியாழன் அன்று மாநிலம் தழுவிய பந்த் அறிவித்துள்ளன

கர்நாடக -இ-ஷரியத் தலைவர், மௌலானா சாகீர் அகமது ரஷாதி பந்த் க்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான இந்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் அனைத்து முஸ்லிம்களையும் ஒத்த எண்ணம் கொண்டவர்களையும் பந்த்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பந்த்தின்போது மக்கள், குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு சமூக விரோதச் செயலிலும் ஈடுபட்டுவிட வேண்டாம், யாரையும் கடைகளை மூடும்படி வற்புறுத்த வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று தெரிவித்தார்.

முன்னதாக செவ்வாயன்று, கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் இஸ்லாத்தின் அவசியமான மத நடைமுறை அல்ல என்று கூறி ஹிஜாப் உரிமை கோரி மாணவிகள் அளித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில் நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *